×

சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டை அரசு கிளை அச்சகங்களில் இன்று முதல் பெயர் மாற்றம் செய்யலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: 2023-24ம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித் துறை அமைச்சரால் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம், சென்னை, மதுரை மற்றும் திருச்சி அரசு கிளை அச்சகங்களில் தற்போது துணை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதற்காக, பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

செய்தித் துறை அமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, அரசு துரித நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற்றிட கட்டணத்தை இ-சலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறப்படும். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டை அரசு கிளை அச்சகங்களில் இன்று முதல் பெயர் மாற்றம் செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Vriddhachalam ,Pudukottai Government Branch Printing Offices ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED விருத்தாசலம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்